யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தாக்க அறிக்கை 2025
யூனியன் அஷ்யூரன்ஸில், எமது வர்த்தக நாம நோக்கான “முக்கியமானதை பாதுகாப்பதனூடாக, மனித முன்னேற்றத்துக்கு வலுச்சேர்ப்பது” என்பது ஒரு அறிக்கை மட்டுமலல. வியாபாரத்துக்கு அப்பால் சென்று, இலங்கை மக்களுக்கு சேவையாற்றுவதற்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.
இந்த அடிப்படையில் இருந்து யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தோற்றம் பெற்றது. யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக என்பது இலங்கையில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயின் பாதிப்புகளை முன்கூட்டியே அவதானித்து, சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட எங்களின் முதன்மையான கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் நான்கு மூலோபாயத் தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது: நீரிழிவு மற்றும் அதன் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி மற்றும் ஈடுபாடு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல், ஆரம்ப கண்டறிதல் மற்றும் ஆபத்து மேலாண்மைக்கு ஆதரவளித்தல், மற்றும் சமூகப் பங்களிப்பை வளர்த்தல்.
இந்த அர்த்தமுள்ள பயணத்தின் கொண்டாட்டமாக யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தாக்க அறிக்கை 2025 அமைந்துள்ளது. இதன் பக்கங்களுக்குள், யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டத்தின் கதை, அதன் தோற்றம், அதன் பரிணாமம், மற்றும் அது தொடர்ந்து மாற்றியமைக்கும் வாழ்க்கைகள் பற்றி நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இது எங்களை இயக்கும் வர்த்தக நாமத்தின் தொலைநோக்கு பார்வையையும் மற்றும் ஒவ்வொரு நாளும் நாம் உருவாக்க முயற்சிக்கும் முன்னேற்றத்தையும், மில்லியன் கணக்கான இலங்கையர்களை நேர்மறையாக பாதிப்பதையும் நினைவூட்டும் ஒரு சக்திவாய்ந்த அம்சமாகும்.
இந்த உள்ளம்சங்களை பின்தொடர்வதற்கு நாம் உங்களை அழைப்பதுடன், அதன் தாக்கத்தை பிரதிபலிக்கவும், நீங்கள் ஒரு கூட்டாண்மை முன்னிலைச் செயற்பாட்டாளர், கொள்கை வடிவமைப்பாளர் அல்லது மாற்றத்தை ஏற்படுத்துபவர் என யாராக இருந்தாலும், உங்களின் சொந்த வழியில், எமது தேசத்தின் சிறப்புக்காக நடவடிக்கை மேற்கொள்வதற்காக நாம் அழைக்கிறோம். நாம் ஒன்றிணைந்து, நீரிழிவு போன்ற தொற்ற நோய்களை பெருமளவில் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக தவிர்ப்பு, ஆரம்பத்தில் இனங்காணல் மற்றும் நீண்ட கால கட்டுப்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் முன்னேற்பாடான செயற்பாடுகளை மேற்கொண்டு, உண்மையில் முன்னேற்றகரமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.